Monday, September 24, 2007

சகுனம் பார்ப்பது

ராசி பலன் பார்த்துவிட்டு வெளியே புரப்படுவது தவறா?

ஒரு வகையில் தவறுதான். என்னடா ஜோதிட நம்பிக்கை உள்ள நானே இப்படி கூறூகிறேனே என்று தோன்றலாம். காரணம் உள்ளது. இன்றைய ராசி பலன்களை யாரும் பெரிதாக கணக்கிட்டு கூட்டிக்கழித்துவிடுதல் இல்லாமல் கூறுவதில்லை என்பது என் கருத்து. அப்ப்டி கூற வேண்டுமானால் எவ்வளவு கால நேரம் செலவாகும் என்பது எனக்குத் தெஇர்யும். அப்படியானால் நினைத்த பலன்களை இஷ்டத்திற்கு எழுதிவிடுகிறார்களா? அப்படியும் பொருளல்ல. பெரும்பாலும் மிக மிக பொதுவான பலனைத்தான் கூற முடொஇயும் அந்த பலன் ஒரு குறிப்பிட்ட ராசிக்காரருக்கு அவர்களுக்குள்ளேயே தசாபுக்தி, அந்தரம் போன்ற மற்ற காரணிகளால் கூடிக்குறையக்கூடியது.எனவே தினசரி நாள் பலனை ஒரு பொருட்டாக கருதுவது சரியல்ல. அதை சாதாரண செய்தியாக எடுத்துக்கொள்ளலாம்.

No comments: